என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய மாணவர் சுட்டுக் கொலை
நீங்கள் தேடியது "இந்திய மாணவர் சுட்டுக் கொலை"
அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர் சரத் கோப்புவின் உடல் நேற்று ஐதராபாத் வந்தடைந்தது. #IndianStudent #SharathKoppu
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கோப்பு (26). அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வந்தார். கடந்த 6-ம் தேதி இரவு அந்த பகுதியில் ஓட்டலுக்கு சென்ற சரத்தை சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சரத்தை சுட்டு கொலை செய்த குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்கள் 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
சரத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தினர்.
இந்நிலையில், அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவரின் உடல் நேற்று ஐதராபாத் வந்தடைந்தது.
அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று இரவு சரத் கோப்புவின் உடல் வந்தடைந்தது. அங்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா சரத்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #IndianStudent #SharathKoppu
அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர் ஓட்டல் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #IndianStudent #SharathKoppu #GunShooting
வாஷிங்டன்:
தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கோபு (26). இவர் அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் சரத் அந்த பகுதியில் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சரத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சரத்தை சுட்டது யார் என்பது குறித்தும், அதற்கு காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சரத்தை சுட்டு கொலை செய்த குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்கள் 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
சரத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
சமீப காலமாக அமெரிக்காவில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. #IndianStudent #SharathKoppu #GunShooting
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X